இன்று காலை ஒரு செய்தி படித்தேன். காலம்காலமாய் வாய் கிழிய நாங்கள் நாட்டு பற்று மிக்கவர்கள் , நேர்மையானவர்கள் என பேசி வரும் நம் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய செய்தி அது. லஞ்சம் கொடுப்பது முதல் பல தவறுகளை சாதாரண மக்களாகிய நாம் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், தவறாமல் அரசியல்வாதிகளையும், அரசு அலுவலர்களையும் திட்டிகொண்டே இருக்கிறோம்.
ஜப்பான் நாட்டில் மக்கள் தங்களுக்கு கிடைத்த சுமார் 4000 கோடி ரூபாயை போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஆம், அங்கு சமீபத்தில் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தில் பல நகரங்கள் சேதமடைதுள்ளன. அதன் சீரமைப்பு பணிகளின் போது இடிந்து கிடந்த பல வீடுகள், அலுவலகங்கள் என பல இடங்களில் மறு சீரமைப்பு பணியின் போது கிடைத்த மொத்த பணம் தான் அது.
அன்பிற்கும், பாசத்திற்கும் நாங்கள் பேர் போனவர்கள் என பீத்திகொள்ளும் நாம், இன்று நம் நாட்டில் இருக்கும் நாட்டு பற்று பற்றி நமக்கே தெரியும். மேலும், ஒரு விபத்து நாடாகும் போது உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றாமல், பணத்தையும் நகையையும் திருடிக்கொண்டு இருகின்றனர். எதிர் காலத்தில் நாம் எங்கு சென்று சேரப்போகிறோம்.